தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 8 பேருக்கு நிவாரணத் தொகை - எஸ்பி வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 8 பேருக்கு சுமார் ரூபாய் 1 லட்சம் (Victim Assistance Fund) நிவாரணத் தொகைக்கான வங்கி வரைவோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் உட்பட 8 பேருக்கு ரூபாய் 1,05,000/-ம் வழங்கப்பட்டுள்ளது.
அதில் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 31.07.2017 அன்று தர்மராஜ் மாணிக்கம் என்பவர் கொலை செய்யப்பட்டார், அவரது வாரிசுக்கு ரூபாய் 20,000/-ம் உட்பட பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் உட்பட புகார்தாரர் மற்றும் வாரிசுதாரர்கள் சோலையப்பன், வெள்ளைச்சாமி மற்றும் பம்பையன் ஆகியோருக்கு பாதிக்கப்பட்டவருக்கான உதவி தொகைக்கான வங்கி வரைவோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வழங்கினார்.